Tuesday, 10 May 2011

இன்னா நாற்பது : செய்யுள் -2

இன்னா நாற்பது : செய்யுள் -2

பார்ப்பாரிற் கோழி யுநாயும் புகலின்னா
ஆர்த்த மனைவியடங்காமை நன்கின்னா
பாத்தில் புடவை (புடைவை )உடை இன்னா  வாங்கின்னா
காப்பாற்றா வேந்தனுலகு
உடையின்னாது

பார்ப்பாரிற் = பார்ப்பார் இல் = அந்தணர் இல்லத்தில்
கோழி யுநாயும் = கோழியும் நாயும்
புகலின்னா = புகல் இன்னா = புகுவது துன்பம்
உரை  : அந்தணர் இல்லத்தில் கோழியும் நாயும் புகுவது துன்பம் தருவதாகும்

ஆர்த்த = உற்ற/நுகர்ந்த /மணந்த
மனைவியடங்காமை நன்கின்னா = மனைவி அடங்காமை நன்று  இல்லை.
உரை : உற்ற மனைவி கணவனுக்கு அடங்காதிருத்தல் துன்பம் தரும்.

குறள் :  இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
                   இல்லவள் மாணாக்கடை

பாத்தில் = வீடு
புடைவை = (புடைப்பெண் )வைப்பாட்டி /மகளிர் சீலை
 உடை இன்னா = உடைமையாகக் கொள்வது
{புடைவை = புடைவை அணிந்த மகளிர் =  மனைவி
உடை = மனதை உடைத்தல் = மனதைத் (அடி, வசவுகளால்) துன்புறுத்துதல்
வாங்கின்னா= வாங்கு + இன்னா = அடி ,வசவு + துன்பம் தரும் }
உரை :வீட்டில் வைப்பாட்டியை உடைமையாகக் கொள்வது துன்பம் தரும்.
             (மனைவியின் மனதை அடி,வசவுகளால் துன்புறுத்துவது துன்பம் தரும்.)

(குறள்  : அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
                இன்சொல் இழுக்குத் தரும்
உரை :  அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர்         பேசுகின்ற    இனிய சொல் ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.)

காப்பாற்றா = பாதுகாக்க முடியாத
வேந்தனுலகு = அரசனின் நாடு
உடையின்னாது = உடை இன்னாது =செல்வம் தீங்கினைத்தருவது
உரை:தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாத அரசனின் செல்வம் தீங்கினைத்தரும்
                                                           
                                                         பொழிப்புரை     :        

அந்தணர் இல்லத்தில் கோழியும் நாயும் புகுவது துன்பம் தருவதாகும்.
உற்ற மனைவி கணவனுக்கு அடங்காதிருத்தல் துன்பம் தரும்.
வீட்டில் வைப்பாட்டியை உடைமையாகக் கொள்வது துன்பம் தரும்.
(மனைவியின் மனதை அடி,வசவுகளால் துன்புறுத்துவது துன்பம் தரும்.)
தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாத அரசனின் செல்வம் தீங்கினைத்தரும்.

No comments:

Post a Comment